பெண்கள் பற்றி பொறியாளர்கள் அவர்களின் பிரிவிற்கு தக்கவாறு விளக்கம் தந்தால் எப்படி இருக்கும் பாருங்கள் ...


எந்திரவியல் முறை விளக்கம் :

வரைபட விளக்கம்:
கணித முறை விளக்கம் :





புள்ளிவிபரம்:

நகை- சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் ..



இன்டெர் நெட்டில் கந்தசாமி படம் வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது.

இந்த இணையத்தளத்தில் திங்கள் மாலை கந்தசாமி வெளியிடப்பட்டது அதற்குள் பாருங்கள் ஏழாயிரம் பேர் பார்த்து விட்டனர் . நாளைக்குள் சுமார் முப்பதாயிரம் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன் , பதிவில் கந்தசாமி படத்தை கடுமையாக விமர்சித்தால் நான் பார்க்க போகவே இல்லை .


இன்று நெட்டில் பார்த்தேன் சுமாரான பிரிண்ட் . தியேட்டரில் பார்த்தவர்களுக்கே மொக்கை என்றால் நெட்டில் சத்தியமாக பார்க்க முடியாது என்பதை தெரிந்துகொண்டேன் .


எப்படியோ நல்ல பிரிண்ட் இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும் எல்லோரும் பார்க்க முயற்சிக்கலாம் . இன்டர்நெட்டில் கண்டிப்பாக சக்கை போடு போடுவான் கந்தசாமி.
விக்ரமின் நடிப்பும் தாணுவின் பணமும் வீணானதும் தான் மிச்சம் . அனேகமாக சன் டிவி ல் வரும் தீபாவளிக்கு வந்துவிடுவான் இந்த கந்தசாமி.

9:56 PM

ம ந

Posted by jay

க்வ்ப்ஜ்வ்

காதலி இல்லாதவர்கள் பெரும் பத்து : ஒரு ஜாலி கலாட்டா பதிவு

  1. நேரம் மிச்சம் மற்றும் பணம் மிச்சம்.
  2. நாடோடிகள் படத்தை போல நண்பர்கள் அவங்கள கொன்னுடுவோம்டா என கூறமாட்டர்கள் .
  3. மிஸ்ஸுடு கால் தொந்தரவு இல்லாதது மற்றும்
  4. இரவு நேரங்களில் எஸ்.எம்.எஸ் தொந்தரவு இல்லாதது.
  5. மாதம் இருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.
  6. மச்சான் , மாமனார் காதலை தெரிந்தால் எப்போது வெட்ட வருவார்கள் என்றபயம் இல்லாதது நல்ல நிம்மதியான தூக்கம்.
  7. எல்லா ஆண் /பெண்கள் என எல்லோரோடும் பழகலாம் /பேசலாம்.
  8. வில்லு , ஏகன் என மொக்கை படங்களை பார்க்கதேவை இல்லை.
  9. நீதான் உலகிலேயே அழகு என பொய் சொல்லத்தேவை இல்லை.
  10. முக்கியமாக இப்படி ஒரு செய்தியை உங்களுக்கு எழுதலாம் தைரியமாக .

இவை எல்லாம் கற்பனை அல்ல அனுபவங்கள் எனக்கல்ல ---- மணிக்கு .
குறிப்பு :
இது யாரையும் (ஐடியா மணியை ) குறிப்பிடுவது அல்ல .

(இன்று இரவு எங்கள் ரூமில் ரத்த ஆறு ஓடினால் அதற்க்கு ஐடியா மணி தான் பொறுப்பு)

10:00 PM

காதலி

Posted by jay

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், பாறை சந்தில் சிக்கி, 37 மணி நேரம் தவித்த குட்டி யானை, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இடையே உள்ள கே.என்.ஆர்., தோட்டத் துக்கு மேற்புறம் டைகர்ஹில் காப்புக் காடு உள்ளது; இங்குள்ள பள்ளத்தில் விழுந்து காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாகவும், குட்டி யானை தனியாக தவித்துக் கொண்டிருப்பதாகவும், மாலை வனப்பகுதிக்குள் வசிக்கும் ஆதிவாசி மக்கள் நேற்று முன்தினம், குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட குன்னூர் வனத்துறையினர்,"தாய் யானையுடன் வந்து கொண்டிருந்த குட்டி யானை அருகே உள்ள ஓடையில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது, அருகே இருந்த பாறை சந்தில் தவறி விழுந்து சிக்கியது; குட்டியை மீட்க முயன்ற தாய் யானை, அருகேயிருந்த 200 அடி"கிடு கிடு' பள்ளத் தில் தவறி விழுந்து இறந்தது,' எனக் கூறினர். நேற்று காலை காலை 7 மணிக்கு, கோவை கோட்ட வனப் பாதுகாவலர் உட்பட 25 பேர் கொண்ட வன அலுவலர்கள், அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



கயிற்றின் உதவியால் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், வலை மூலம் தொட்டில் கட்டி, 800 அடி உயரத்தில் இருந்து காடுகள் சூழ்ந்த செங்குத்தான பாதையில், கீழ் நோக்கி யானையை தூக்கி வந்தனர். குட்டி யானை பிறந்து 20 நாட்கள் மட்டுமே ஆகியிருந்ததால், அது சோர்வடையாமல் இருக்க, கால்நடை டாக்டர் கலைவாணன், அவ்வப்போது குளுகோஸ், எலக்ட்ரோலைட் திரவத்தை கொடுத்து தெம்பு ஊட்டினார்; பின், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஐந்து மணி நேர போராட்டத்துக்கு பின், பகல் 12 மணிக்கு ஜீப் மூலம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. பள்ளத்தில் விழுந்து இறந்த தாய் யானை அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.



தாயை இழந்த காட்டு யானை முகாம் யானையாகிறது: கடந்த 22ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு பாறைகள் சூழ்ந்த புதரில் சிக்கிய குட்டி யானை, நேற்று காலை 9 மணிக்கு மீட்கப்பட்டது; 37 மணி நேரம் குட்டி யானை தனிமையில் தவித்தது; வன அதிகாரிகள் கூறுகையில், ""காட்டில் வாழ்ந்த இந்த யானையை மனிதர்கள் தொட்டுவிட்டதாலும், மனிதர்களின் சுவாசக் காற்று யானை மீது பட்டுவிட்டதாலும், இந்த குட்டி யானையை மற்ற காட்டு யானைகள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளாது; குட்டி யானையை அரவணைக்க அதன் தாய் யானையும் இல்லாததால், முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு சென்று, முகாம் யானையாக மாற்ற பயிற்சி கொடுக்கப்படும்,'' என்றனர்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் தெண்டுல்கர். 20 ஓவர் போட்டியில் விளையாட விட்டாலும் அவர் விளம்பரங்கள் மூலம் தொடர்ந்து கோடிக்கணக்கில் வருமானங்களை குவித்து வருகிறார்.
பல வெற்றிகளை பெற்று புகழ் பெற்ற கேப்டன் டோனியை விட அவர் தான் அதிக வருமானம் சம்பாதித்து இருக்கிறார். 2008-09-ம் ஆண்டுக்கான வருமானவரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் ரூ.8.1 கோடி செலுத்தியுள்ளார். 2007-08-ம் ஆண்டில் அவர் ரூ.8.7 கோடி செலுத்தி இருக்கிறார்.
கேப்டன் டோனி ரூ.4.7 கோடி செலுத்தி 2-வது இடத்தில் உள்ளார். அவர் 2007-08-ம் ஆண்டில் ரூ.3.4 கோடி செலுத்தி இருந்தார்.
கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த ஷேவாக் தற்போது வருமானவரி செலுத்துவதில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் ரூ.3.1 கோடி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஷேவாக் ரூ.1.9 கோடி செலுத்தி இருந்தார்.

யுவராஜ்சிங் ரூ.2.6 கோடி செலுத்தி 4-வது இடத்திலும், டிராவிட ரூ.2.4 கோடி செலுத்தி 5-வது இடத்திலும் உள்ளனர். யுவராஜ்சிங் கடந்த ஆண்டு ரூ.2 கோடியும், டிராவிட் ரூ.3.1 கோடியும் வருமானவரி செலுத்தி இருந்தனர்.